ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைப்பு
சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், வெப்ப அலை (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டன.

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், வெப்ப அலை (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டன.
இந்த வார்டில் 10 படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓ.ஆர்.எஸ். கரைசல், ஆக்ஸிஜன் வசதி, அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இதன் மூலம், வெப்ப அலை காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகள் உடனடி சிகிச்சை பெற முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






