உதயநிதி மீது புதிய வழக்குகள் இல்லை: உச்சநீதிமன்ற உத்தரவு
டெல்லி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்கு பதிவு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்கு பதிவு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மராட்டியம், பீகார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீரில் உதயநிதிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ஐகோர்ட்டுக்கு மாற்றக் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, உதயநிதி மீது சனாதன விவகாரம் தொடர்பாக எந்த புதிய வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உறுதியாக தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து எதிர்மனுதாரர்களும் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
What's Your Reaction?






