காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்ற உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு, இலங்கை நீதிமன்றம் ரூ.3.25 லட்சம் அபராதம் விதித்தது.

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு, இலங்கை நீதிமன்றம் ரூ.3.25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 28ம் தேதி, இந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, காரைக்கால் மீனவர்கள் 13 பேர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, அவர்கள் தலா ரூ.3.25 லட்சம் அபராதம் செலுத்தினால், விடுதலை செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






